logo

உத்தமபாளையம் அருள்மிகு திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவிலில் திரு மாணிக்கவாசகர் குருபூஜை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அமைந்துள்ளது அருள்மிகு திருகாளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை அம்மன் திருக்கோவில்.இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்.

இக்கோவிலில் இன்று மாணிக்கவாசகர் குருபூஜை விமர்சையாக நடைபெற்றது.

மாணிக்கவாசகர் குரு பூஜையை முன்னிட்டு மாணிக்கவாசகருக்கு மஞ்சள்,அரிசி மாவு,பால், தயிர்,தேன், பஞ்சாமிர்தம்,திருநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தீபம்,கும்பதீபம்,மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த மாணிக்கவாசகர் குரு பூஜையில் விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தமபாளையம் திருக்கைலாய திருக்காளாத்தீஸ்வரர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.மேலும் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

17
1565 views