ஆட்டோவும், லாரியும் மோதி பயங்கர விபத்து
ஆட்டோவும், லாரியும் மோதி பயங்கர விபத்து
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சாலையில் ஆட்டோவும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த சாதிக், ஜோதி, அசோக், பிரதீப் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்று அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரசன்ன வரதன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.