logo

மதுரை மண்ணில் மலை காவலன் விருது

சகாயம் நட்பு வட்டம் சார்பில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் கச்சைகட்டி மு.ஞானசேகரன் அவர்களுக்கு "மலைக் காவலன்" பட்டம் வழங்கப்பட்டது. நட்பு வட்ட நிறுவனத் தலைவர் பேராசிரியர் வெங்கடாசலம் வரவேற்புரை வழங்க டங்ஸ்டன் எதிர்ப்பு கிராமங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். அவர் பேசும்போது," மலைக் காவலன் விருது பெறுவதற்கு தகுதி பெற்ற ஞானசேகரன் அவர்கள் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட முன்வர வேண்டும்
" என்ற ஆலோசனையை வழங்கினார். பல்வேறு இயக்கத்தை சார்ந்த தலைவர்கள் பாராட்டிப் பேச சகாயம்
நட்பு வட்ட தலைவர் திருமதி அமுதா அவர்கள் நன்றி கூறினார்.

42
6552 views