logo

Govt property occupied

இதன் மூலம் தெரிவிப்பது என்ன வென்றால், காஞ்சிபுரம் , குன்றத்தூர் ,கொளப்பாக்கம்,கொளப்பாக்கம் மெயின் ரோடு,ச.எண் : 14, ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்வாக்கு சக்திபீடம், என்ற பெயரில் திருமதி.முருகம்மாள் ஸ்ரீதர் என்பவர் அந்த இடத்தில கோவில் ஒன்றை கட்டி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார், அந்த இடமானது அரசாங்கத்திற்கு சொந்தமான நீர்நிலைகளுக்கு உட்பட்டுவருவதாக கூறப்படுகின்றது, இந்த நிலையில் திருமதி.முருகம்மாள் என்பவர் அத்துமீறி அங்கே கோவில் கட்டி உள்ளத்தையும் மேலும் அந்த கோவிலை விரிவாக்கம் செய்யும் முடிவில் அதற்குரிய வேலைகளை சிறப்பாக செய்து வருகின்றார், மேலும் அந்த இடத்திற்கு வரி செலுத்தி அந்த ரசீதையும் வைத்துள்ளார்.அதனை நாங்கள் இணைத்துள்ளோம். மேலும் அவர் தவறான முறையில் மின் இணைப்பை பயன்படுத்தி அரசு மின்வாரியத்திற்கு பல லட்சம் வரை நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதனை சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரியம்தலைமை அலுவலகத்தில் இருந்து அங்கு சென்று பார்த்து பல முறை கண்டித்து அதற்குரிய பணத்தையும் அவரிடம் இருந்து பெற்று உள்ளனர். இப்படி பல்வேறு தவறான முறையில் அவர் அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படுத்தி வருகின்றார். இதனை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினர் முயற்சி எடுத்தும் அரசு அதிகாரிகள் அங்கு சென்று அதனை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும் அவர்களை பல்வேறு வகையில் பயமுறுத்தியும் அவர்கள் பணியினை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளார்.எங்கள் அமைப்பின் மூலம் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஆன்மீகபணி செய்துகொள்ளட்டும் அதனை அவர்கள் சொந்த இடத்தில செய்தல் மிக்கது. எனவே இதனை உடனை தடுக்கும் விதத்தில் செயல்பட்டால் நம்முடைய அன்பு முதல்வர் அவர்களின் ஆட்சிக்கு எந்த களங்கமும் வராமல் தடுக்க இயலும், மேலும் அவர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர்கள் என்னை கைக்கூலிகளை வைத்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில பல்வேறு விதமான குற்ற செயல்களையும் செய்துவருகின்றனர், அந்த கோவிலின் பின்புறம் கஞ்சா போன்ற போதை பொருட்களையும் வைத்து வியாபாரம் செய்வதாக அங்கு இருப்பவர்கள் கூறி வருகின்றனர், திருமதி.முருகம்மாள் அவர்களின் மகனான திரு.வசந்த் அவர்கள் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மனுவின் மீது உகந்த நடவடிக்கை எடுக்கும் படி மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

11
584 views