logo

திருச்சியில்,லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது !

திருச்சியில் வரி நிர்ணயம் செய்ய 1௦,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி மாநகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிபபுத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5,92௦ சதுரடி உள்ள காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்யவேண்டி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்தார்.
அந்த காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாநகராட்சி பொன்மலை மண்டலம் 4 அலுவலகத்தின் 66வது வார்டு பில் கலெக்டர் செபாஸ்டின்(56) என்பவரை அணுகியுள்ளார். வரி நிர்ணயம் செய்ய செபாஸ்டின் ருபாய்.12,௦௦௦ லஞ்சம் கேட்டுள்ளார், பின்னர் கேட்ட பணத்தில் இரண்டாயிரம் ரூபாய் கழித்துக் கொண்டு ரூபாய் 1௦,௦௦௦ தரும்படி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் ரகசியமாக கண்காணித்து சீனிவாசனிடம் இருந்து பில் கலெக்டர் செபஸ்டியன் ரூபாய்.1௦,௦௦௦ லஞ்சமாக வாங்கிய போது கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவரை சோதனையில் செய்ததில் செபஸ்தியானிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் 24,௦௦௦ சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டது.

21
765 views