logo

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றவரின் வீட்டிற்கு நேரில் சென்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டு.

கம்பம் கம்பமெட்டு காலனி காட்டு பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அகமது கபீர் (57) போடி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நபிலா (27) இவருக்கு திருமணம் ஆகி முகமது அப்சல் என்ற கணவரும், ஒரு வயதில் குழந்தையும் உண்டு. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நபிலா தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு அரசு பணிகள் காத்திருந்தன. இருந்த போதும் வணிகவரித்துறை உதவி ஆணையாளருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் முதல் நிலை தேர்வில் பங்கேற்று இந்திய அளவில் 27 ரேங்க்கில் இடம் பிடித்தார். இந்நிலையில் அவருக்கு சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையாளர் பணி நியமன ஆணை கிடைத்தது. இதையடுத்து சொந்த ஊரான கம்பத்திற்கு வந்த அவரை பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதன்படி நேற்று நபிலாவின் வீட்டிற்கு சென்ற தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நபிலாவை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொண்டார். மேலும் நபிலாவின் திறமையை பாராட்டி ஊக்க தொகையும் வழங்கினார். இதுகுறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், தமிழக அளவில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ம் நிலை தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்று கம்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். நபிலாவின் திறமையை பாராட்டுகிறேன் என்றார். இதேபோல் பெண் பிள்ளைகள் பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உயர் பதவிகளில் பணிபுரிய வேண்டும் என்றார்.

11
1075 views