மதுரையில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்கள் பொது ஏலம்
நேற்று (22.09.2025) மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில், கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்களை போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுவின் (DRUG DISPOSAL COMMITTEE) தலைவரான மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) மற்றும் உதவி இயக்குநர், மதுரை மாநகர் தடய அறிவியல் ஆய்வகம், காவல் உதவி ஆணையர் (வரதட்சணை தடுப்புப்பிரிவு ) ஆகியோர்கள் முன்னிலையில் அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி பொது ஏலம் நடத்தப்பட்டது.
-திருச்சி பிரசன்னா