logo

உங்களுடன் ஸ்டாலின் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி,செப்.25. கும்மிடிப்பூண்டி வட்டார வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உங்களுடன் ஸ்டாலின் பணிகளை புறக்கணித்து வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டார வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் பணிகளை புறக்கணித்த வருவாய் துறையினர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டார வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளான சுப்பிரமணி, பிரபு, பாக்கிசர்மா, பழனி, மணிகண்டன், சண்முகம், யோகநாத் ஆகியோர் கண்டன
உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழ்நாடு நில அளவையர் ஒருங்கிணைப்பு சங்கத்தினர், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தினர். திரளானோர் பங்கேற்றனர்.


6
2333 views