வளர்ச்சி நோக்கில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி – தாம்பரத்தில் Dr.கிருத்திகாதேவியுடன் சந்திப்பு
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகாதேவி (MBBS, DGO) அவர்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, டாக்டர் கிருத்திகாதேவிக்கு தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாகூப் அவர்கள் கலந்து கொண்டு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பு, தாம்பரம் தொகுதியில் தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.