மேல நீலிதநல்லூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்கு சேகரிப்பு...
09/04/2026 அன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சங்கரன்கோவில் வெற்றி வேட்பாளர் சங்கை கணேசன் , பாண்டியாபுரம்,தன்னூத்து,குலசேகரமங்கலம், வீரசிகாமணி ,சேர்ந்தமரம் , கடையாலுருட்டி, திருமலாபுரம், பெரியசாமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்.வெற்றி வேட்பாளர் சங்கை கணேசனை பொதுமக்கள் வரவேற்ற தருணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் டாக்டர் R .S.K. துரை,தமிழ்நாடு காங்கிரஸ் எஸ் சி துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன்,மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே. சிவராமகிருஷ்ணன்,சங்கரன்கோவில் காங்கிரஸ் கலைப்பிரிவு நகரத் தலைவர் P. ரிபாய்,ஆயிரப்பேரி லட்சுமணன் தென்காசி நைனா,தென்காசி மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவு நகரத் தலைவர் இ. தங்கப்பெருமாள்,மாவட்ட காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் திருமலையப்பன்,மற்றும் நிர்வாகிகள் பலர் பொது மக்களுடன் கலந்து கொண்ட தருணம்.