
தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனி - ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள மணி நகரின் அவலநிலை??? இவற்றினைக்கண்டு துரித நடவடிக்கை எடுக்குமா ? மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் ???
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் இருக்கும் மணி நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும், தெரு விளக்குகளோ இல்லை.... மேலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டிக்கிடக்கின்ற அவலநிலை ! இங்கு குப்பைகள் சரியாக அள்ளப் படுவதில்லை! போதாத குறைக்கி தண்ணீர் வசதி முற்றிலும் இல்லை... ஏனெனில் மணி நகரில் போட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் எடுக்கப் பட்டு வருகின்ற தண்ணீர் மணி நகருக்கு வழங்காமல் , ரத்தினம் நகருக்கு தாரை வார்ப்பது ஏன் என்று புரியவில்லை ! மேலும் இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழிகளாகவே காணப்படுகிறது! இவற்றை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருக்க என்ன காரணம்? அம்மா பூங்காவின் பின்பக்கம் நீடில் பாய்ண்ட் அருகிலும், காஸ் மாஸ் கிளப் சாலை, மற்றும் இங்கே உள்ள அனைத்து தெருக்களிலும் சாலைகள் குண்டும் குழிகளாகவே காணப்படுகிறது ! மற்றும் குப்பைகள், தண்ணீர் வசதி ஆகிய பிரச்சினைகள் சரி செய்து தராமல் ஊராட்சி நிர்வாகம் கைகட்டி வாய் பொத்தி இருக்கும் காரணம் என்ன? ரத்தினம் நகர் - மணி நகர் மெயின் ரோட்டில் வடிகால் அமைக்க 8.15 லட்சம் செலவு செய்து வடிகால் அமைத்த பெயர் பலகை? மட்டும் .....ஆனால் அந்த பணிகளை உண்மையில் செய்தார்களா என்று சந்தேகம் ஏற்படுகிறது..... இருப்பினும் இவைகள் எல்லாம் சரியாக பராமரிக்க படுவதில்லை? ஏன்? எதற்காக? இந்த நிலையில் மேல் நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதே கிடையாது , இந்த பகுதியில் சரியான முறையில் தண்ணீர் வசதி முற்றிலும் இல்லை! ஆனால் மேல் நிலைத் தொட்டி ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலமாக பல லட்சங்கள் வீண் செலவு....... தண்ணீரே ஏற்றப்படாத இந்த மேல் நிலைத் தொட்டி பொதுமக்கள் பார்வைக்கு மட்டும்தான் போல ! தண்ணீரே இல்லாத மணி நகர் பகுதியில் மேல் நிலைத் தொட்டி எதற்காக? மக்களை ஏமாற்றவா ? இந்த குறைகளை எல்லாம் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி நிர்வாகத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் மூலமாகமும் முறையிட்டும், பலமுறை புகார்களை அளித்தும் .... இதுவரையிலும் எந்த வித மான நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை! இனியாவது உடனடியாக இந்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இவற்றை அனைத்தையும் சரி செய்து தருவார்களா ??? என்று இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்! இவை அனைத்தும் உடனடியாக சரி செய்து தர வேண்டும்! பொறுத்து இருந்து பார்ப்போம் என்று பொதுமக்கள் பேசுவது நன்கு கேட்க முடிகிறது!!!..................................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி